ADVERTISEMENT

ஜாமீன் பெற நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி!

10:58 AM Jun 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மே 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மே 30- ஆம் தேதி உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மத்திய குற்றப்பிரிவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும் ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT


இந்த நிலையில் இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் அவரது ஜாமீன் மனு விசாரிக்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT