Skip to main content

“சட்ட ஒழுங்கு பிரச்சனைய ஏற்படுத்தவே இந்த ரெயிடு..” - ஆர்.எஸ். பாரதி 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

"This raid is to create law and order problem.." - R.S. Bharti

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “ராமர் பெயரை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்ததுபோல், அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நாடகம் ஆடினார்கள். அனுமன் கர்நாடகாவில் பிறந்தார் எனச் சொல்லி அங்கு அரசியல் நடத்தினார்கள். வாட்ஸ் அப், ஊடகங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்... ஒரு கவரின் ஐந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மேல் தாமரை சின்னத்தை வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். ரூ. 2000 நோட்டு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வளவாக புழகத்தில் இல்லை. இது தொடர்பாக என் மீது வழக்கு போட்டாலும் கூட அவர்கள் கொடுத்த பணத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது அதனை நிரூபிக்க நானும் காங்கிரஸ் கட்சியினரும் தயாராக இருக்கிறோம். இத்தனை நாடகங்களுக்கு பிறகும் மிகப் பெரிய வெற்றியை கர்நாடகா மக்கள் காங்கிரஸுக்கு அளித்துள்ளனர். 

 

கர்நாடகாவில் முதல் விக்கெட் விழுந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பைனல் மேட்சில் மேன் ஆஃப் தி மேட்சாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தேர்தலின் முடிவு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டு விவகாரம் கூட கர்நாடகா தேர்தல் முடிவு காரணமாக இருக்கக்கூடுமோ என சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நம்பத்தக்கதாகவும் இருக்கிறது. அண்ணாமலை கர்நாடகாவில் தோல்வியை சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், ‘பாஜக மற்றும் அதன் அதிகாரம் குறித்து இன்னும் 10 நாட்களில் செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வார்’ எனப் பேசினார்.

 

இது மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்தில், ‘அமலாக்கத்துறை தற்போது பிசியாக உள்ளது. அந்த பிஸியை எல்லாம் முடித்துவிட்டு செந்தில் பாலாஜிக்கு ரெயிடு வருவார்கள்’ என பகிரங்கமாக சொன்னார். செந்தில் பாலாஜியை குறி வைக்க காரணம், கோவை மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி கனிசமான இடங்களைப் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து இந்தப் பகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100க்கு 100 திமுக வெற்றி பெற்றது. ஆகவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவரின் முந்தைய பேச்சுக்களே உதாரணமாக காட்ட முடியும். முதலமைச்சர் இங்கு இல்லாதபோது இப்படியான காரியங்களை செய்வது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது.

 

எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 23 ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு இழுக்கச் சென்றிருக்கிறார். அதன்படி அவர் தினமும் முதலிட்டாளர்களைச் சந்தித்து இங்கு கொண்டுவரும் முதலீடுகளை குறித்த செய்திகள் தேசிய பத்திரிகைகளில் எல்லாம் வந்துகொண்டிருக்கிறது. எனவே இதனை திசை திருப்ப என்ன முயற்சி எனும் வஞ்சக எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் பாஜக அரசு இன்று ரெயிடு நடத்தியிருக்கிறார்கள். திமுக எந்த காலத்திலும், ரெயிடுகளுக்கு பயந்ததில்லை. 1976 அவசர காலகட்டத்திலேயே ரெயிடு என்றால் என்னவென்றே தெரியாதபோதே ரெயிடுகளை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி பெற்ற இயக்கம் திமுக. 

 

ஒரு ரெயிடு நடக்கிறது என்றால், மாநில காவல்துறையிடம் தெரிவித்து, உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் ரெயிடுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இன்று எந்த தகவலும் வரவில்லை என மாவட்ட எஸ்.பி.யே சொல்கிறார். இதில் சந்தேகம் எழுகிறது. எந்தவித அடையாளமும் இல்லாமல் விடியற்காலை மூன்று மணிக்கு வந்திருக்கிறார்கள். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்கள் யாரெனத் தெரியாமல் தற்காப்புக்காக வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியிருக்கலாம். ஆனால், எனக்கு விவரம் வந்தவுடனேயே செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவினர் யாரும் அங்கிருக்கக் கூடாது என்று சொன்னேன். அவரும் உடனடியாக அங்கிருந்து அவர்களை கலைந்துபோக செய்திருக்கிறார். 

 

இதில் இருந்து என்ன தெரிகிறது. ஐ.டி. அதிகாரிகளை அடித்தார்கள் என செய்தியாக்கி திட்டமிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என பொதுமக்கள் கூட சொல்லும் அளவுக்கு இந்த சோதனை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது எவ்வளவு கலவரங்கள் நடந்தன. ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.