Skip to main content

சர்கார் படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை ! தியேட்டர்களுக்கு சீல் அபாயம்

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
vijay

 

 

 

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'சர்கார்' படம் சமீபகாலமாக கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் தமிழக செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும், தற்போது பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படமாக எதுவாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். அமைச்சர் இப்படி காட்டமாக எச்சரித்துள்ளது திரையரங்க உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்