Skip to main content

ஓய்வு முடிவு வாபஸ்... பஞ்சாப் அணிக்காகக் களமிறங்கும் யுவராஜ் சிங்! 

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

yuvraj singh

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் யுவராஜ் சிங், கடந்தாண்டு ஓய்வு பெற்றார். சர்வதேச மற்றும் இந்தியாவின் உள்ளூர்ப் போட்டிகளிலும் விடைபெற்ற அவர், வெளிநாட்டு லீக் போட்டிகளில் மட்டும் ஆடிவந்தார்.

 

இந்தநிலையில், பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியம், யுவராஜ் சிங்கிடம், பஞ்சாப் அணிக்காக ஆடுமாறும், பஞ்சாப் அணி வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யுவராஜ் சிங், மீண்டும் தன்னை பஞ்சாப் அணிக்காக ஆட அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் எழுதினார்.

 

ஓய்வு முடிவிலிருந்து வெளியில் வருவது குறித்து பேசிய யுவராஜ் சிங், பஞ்சாப் மாநில அணிக்காக கோப்பையை வெல்லவேண்டும் என்ற விருப்பமே ஓய்வு முடிவில் மாற்றத்திற்கான காரணம் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், 'சையத் முஷ்டாக் அலி ட்ரோஃபி'க்கான பஞ்சாப் அணியின் 30 பேர்கொண்ட உத்தேச அணியில் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம், யுவராஜ் மீண்டும் பஞ்சாப் அணைக்காக விளையாடியது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம், உள்ளூர்ப் போட்டியில் ஆட அனுமதி அளித்துவிட்டால், ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை, யுவராஜின் அதிரடியைப் பார்க்கலாம்.

 

சூதாட்டப் புகாரில் தடைவிதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கேரள மாநில அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.