Skip to main content

88 எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? டி.ராஜேந்தர் கேள்வி

Published on 15/07/2018 | Edited on 15/07/2018


 

 

ஊழல்களால் தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது என்றும் இந்த ஆட்சியை அகற்றாமல், 88 எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காமராஜரின் 116வது பிறந்தநாளையொட்டி தருச்சியில் அவரது உருவசிலைக்கு டி.ராஜேந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஊழல்களால் தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை அகற்றாமல், 88 எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நடிகர் விஜய் திரைப்படங்களில் புகைப்படிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அன்புமணி ராமதாஸ், அவர் 15 வருடமாக மத்திய அமைச்சராக இருந்த போது குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? என சராமரி கேள்விகளை எழுப்பினார்.

சார்ந்த செய்திகள்