Skip to main content

ஒரே நாளில் நான்கு பொதுக்கூட்டத்தில்  ராகுல்காந்தி !

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி பிரச்சார  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து சேலம் உட்பட மற்ற மாவட்ட பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டுகிறார்.

 

rahul gandhi



நான்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுலின் பயண விவரங்கள்:
பொது கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் நேரம் :
11:40 மணிக்கு  - கிருஷ்ணகிரி 
2:10 மணிக்கு - சேலம் 
4:30 மணிக்கு - தேனி 
6:15 மணிக்கு - திருப்பரங்குன்றம்   

சேலத்தில் நடைப்பெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியுடன் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டாக நாமக்கல் ,கள்ளக்குறிச்சி , சேலம் , விழுப்புரம் , கரூர் ,திருச்சி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்