Skip to main content

ஆலங்குடி உழவர் சந்தையைத் திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
cpi

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உழவர் சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆலங்குடி உழவர் சந்தை கடந்த 23.12.2000 அன்று அப்பேதைய திமுக ஆட்சியின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறந்து வைக்கப்பட்டது. ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும்,;, போக்குவரத்துக்கும் இடையூராக இருந்ததாலும் அகற்றப்பட்டு உழவர் சந்தையோடு இணைக்கப்பட்டது. திமுக ஆட்சிகாலம் வரை இயங்கிவந்த உழவர்சந்தை அதிமுக ஆட்சியில் படிப்படியாக சிதைக்கப்பட்டது. இதனால், மீண்டும் பள்ளிவாசல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை வளாகம் தற்பொழுது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

 

ஆதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உழவர் சந்தை திறக்கப்படும் என்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வியாழக்கிழமையன்று காலையிலேயே உழவர் சந்தை திறப்பு விழாவிற்கு ஏராளமானோர் கூடினர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கட்சியினருடன் பேச்சுவார்தை நடத்தினர். அன்று மாலையே வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்தை நடத்தி உழவர்சந்தையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் உழவர்சந்தை திறப்புவிழா போராட்டம்; ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

 

ஆலங்குடி உழவர் சந்தை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.சிவக்குமார், எஸ்.பாண்டிச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆறுமுகம், கே.நாடியம்மை, என்.தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.