Skip to main content

அரியலூரில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

அரியலூர் மாவட்டத்தில் சுமார் 3 மாதத்துக்கும் மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில், மாவட்டத்தின் சில பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. செந்துறை, பொன்பரப்பி, மருவத்தூர் உள்ளிட்ட பகுதியில் சாலைகளிலிருந்து தண்ணீர் சாக்கடை வாய்க்காலுக்கு ஓடும் அளவிற்கு மழை பெய்தது.

 

rain



இதனால் மேற்கண்ட பகுதியில் வெப்பம் குறைந்து சற்று குளிர்ச்சியாக சீதோஷன நிலை காணப்பட்டது. அதேபோல், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதி குளிரோட்டமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

 

 

 

  

சார்ந்த செய்திகள்