Published on 19/07/2022 | Edited on 19/07/2022
அதிமுகவில் எழுந்த உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை நீக்குவதாக பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் அதிமுக வங்கி கணக்கை பராமரிக்க தங்கள் தரப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பு சார்பில் வங்கிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொருளாளராக எடப்பாடி தரப்பு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தது. அவருக்கு அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கிடுமாறு வங்கிகளுக்கு எடப்பாடி தரப்பு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது வங்கிகள் அக்கடிதத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் எடப்பாடி தரப்பு மட்டுமே ஈடுபட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.