Skip to main content

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Supreme Court question to enforcement department

 

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.

 

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

 

அதே சமயம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மணீஷ் சிசோடியாவுக்கு பணம் வராதபோது அவரை எப்படி பணப் பதுக்கல் பிரிவின் கீழ் கொண்டு வர முடியும்” என உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்