Skip to main content

குறையும் தொற்று.... குறையாத மரணம் - தவிக்கும் மராட்டியம்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

jjgf

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று முன்தினம் 11,782 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 10,792 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,28,226 ஆக அதிகரித்துள்ளது. 2,36,491 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் 309 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 40,040 பேர் கரோனா தொற்றால் இதுவரை மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 13,932 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 12,55,729 ஆக உயர்ந்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்