Skip to main content

இந்தியாவில் 492 பேருக்கு கரோனா!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது. 
 

இந்தியர்கள் 451 பேரும், வெளிநாட்டினர் 41 பேர் என மொத்தம் 492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 9 பேர் இறந்த நிலையில் 37 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் 95, மகாராஷ்டிராவில் 87, டெல்லி 31, தமிழகத்தில் 12 பேருக்கு உறுதியானது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

india coronavirus strength peoples kerala, maharastra

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்