Skip to main content

'52.13 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

NUMBER SAMPLES HAVE BEEN TESTED TILL DATE ICMR


நாடு முழுவதும் இன்று (11/06/2020) காலை 09.00 மணிவரை 52,13,140 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
 


அதேபோல் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,51,808 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி (10/06/2020) 6,38,846 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்