ADVERTISEMENT

கண்ணீர்க் கோப்பைகள்!

01:31 PM May 06, 2020 | rajavel

ADVERTISEMENT



*
சிந்தனைத் தெளிவில்லாமல்
டாஸ்மாக்கில் தள்ளாடுகிறது
அரசு

ADVERTISEMENT

*
குடிமகன்கள்
மதுக்கடைகளில் கொட்டுவது
காசையல்ல;
தங்கள் குடும்பத்தின் கண்ணீரை.

*
அதில்
குழந்தைகளின் பசியும்
பெண்களின் பரிதவிப்பும்
குடும்பத்தின் துயரமும்
தேம்பிக்கொண்டிருக்கும்.

*
அவர்கள்
அதிகார போதையை
அதிகரித்துக் கொள்ள
ஏழைப் பெண்களின்
கண்ணீர் வேண்டிக்
கோப்பைகளை ஏந்துகிறார்கள்.

*
கரோனாத் தொற்றின்
திமிரடக்கப் போராடும்
மருத்துவத் துறையினர்
சுகாதாரத் துறையினர்
காவல் துறையினர்
உள்ளிட்டோர்
சிந்துகிற
வியர்வைத் துளிகள்
இனி
அவர்களின்
கலவைக்கு உகந்த
குளிர்பானம் ஆகலாம்.

*
இனி
கொரோனா வீதியெங்கும்
டாஸ்மாக் மனிதர்களின்
வீதியுலா நடக்கும்.
அவர்களின் காலடியில்
விரியக் காத்திருக்கின்றன
உறவுகளைத் தவிக்க வைக்கும்
மயானப் பாதைகள்.

*
இவர்களின் கருணை
குடிமக்களுக்கானதல்ல;
’குடி’மகன்களுக்கானது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT