ADVERTISEMENT
*
சிந்தனைத் தெளிவில்லாமல்
டாஸ்மாக்கில் தள்ளாடுகிறது
அரசு
ADVERTISEMENT
*
குடிமகன்கள்
மதுக்கடைகளில் கொட்டுவது
காசையல்ல;
தங்கள் குடும்பத்தின் கண்ணீரை.
*
அதில்
குழந்தைகளின் பசியும்
பெண்களின் பரிதவிப்பும்
குடும்பத்தின் துயரமும்
தேம்பிக்கொண்டிருக்கும்.
அதில்
குழந்தைகளின் பசியும்
பெண்களின் பரிதவிப்பும்
குடும்பத்தின் துயரமும்
தேம்பிக்கொண்டிருக்கும்.
*
அவர்கள்
அதிகார போதையை
அதிகரித்துக் கொள்ள
ஏழைப் பெண்களின்
கண்ணீர் வேண்டிக்
கோப்பைகளை ஏந்துகிறார்கள்.
*
கரோனாத் தொற்றின்
திமிரடக்கப் போராடும்
மருத்துவத் துறையினர்
சுகாதாரத் துறையினர்
காவல் துறையினர்
உள்ளிட்டோர்
சிந்துகிற
வியர்வைத் துளிகள்
இனி
அவர்களின்
கலவைக்கு உகந்த
குளிர்பானம் ஆகலாம்.
*
இனி
கொரோனா வீதியெங்கும்
டாஸ்மாக் மனிதர்களின்
வீதியுலா நடக்கும்.
அவர்களின் காலடியில்
விரியக் காத்திருக்கின்றன
உறவுகளைத் தவிக்க வைக்கும்
மயானப் பாதைகள்.
இனி
கொரோனா வீதியெங்கும்
டாஸ்மாக் மனிதர்களின்
வீதியுலா நடக்கும்.
அவர்களின் காலடியில்
விரியக் காத்திருக்கின்றன
உறவுகளைத் தவிக்க வைக்கும்
மயானப் பாதைகள்.
*
இவர்களின் கருணை
குடிமக்களுக்கானதல்ல;
’குடி’மகன்களுக்கானது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT