Skip to main content

தமிழகத்தை குறிவைத்து தீவிரவாதம்?உளவுத்துறை அதிர்ச்சி!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் நூற்றுக்கணக் கான பேரை பலி வாங்கியது. அந்த தாக்குதல் தமிழகத்தின் கோவை, சென்னை; கேரளாவில் பாலக்காடு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்றிருக் கும். ஆனால் இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையோடு இருந்ததனால் தவிர்க்கப்பட்டிருக் கிறது என்கிறார்கள் தீவிரவாத எதிர்ப்பில் நிபுணத் துவம் பெற்றிருக்கும் காவல்துறை அதிகாரிகள். அவர்களிடம் பேசிய போது, "சாகீர் நாயர் போன்றவர்கள் பரப்பி வரும் வழிபாட்டு முறையான "வஹாபிசம்' முஸ்லிம் இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. இதில் "ஜிஹாத்' போற்றப்படுகிறது.

 

srilanka



வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும் நான்கு இளைஞர்கள் கூடினாலும் ஜிஹாத்தின் சாதக பாதகங்கள் பற்றிய விவாதம் எழுகிறது. யார் அதிகம் தங்கள் மத விரோதிகளை தாக்கினார்களோ அவரே ஹீரோவாக இளைஞர்களால் கருதப்படுகிறார். இந்த ஹீரோ வழிபாடுதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இமாம் அலி இப்படி உருவானவன்தான்'' என்கிறார்கள். இப்பொழுது சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இயங்கும் ஐ.எஸ். தீவிரவாதி கள் சிறந்த ஜிஹாதிகள் என வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கருதி, அவர்களை பின்பற்றத் தொடங்குகிறார்கள். இன்று உலகத்தை கைக்குள்ளே கொண்டு வந்திருக்கும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற இன்டர்நெட் சேவைகள் இலங்கை, இந்தியா, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகளை கடந்து ஜிஹாதி மனநிலையில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைக்கின்றன என்கிற அதிகாரிகள் அதற்கு உதாரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவனின் கதையை சொன்னார்கள்.

 

srilankan



2015ஆம் ஆண்டு முதல் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கத்தார் நாடு வெளியேற்றிய பாலகாட்டைச் சேர்ந்த இளைஞருடன் கோவையில் கைது செய்யப்பட்ட கலீஃபா இயக்கத்தினர் தொடர்பிலிருந்திருக்கிறார்கள். இந்த பாலக்காட்டுக்காரர் ஜப்பாத் அல் நுங்ரா என்கிற ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காக சிரியாவுக்கு செல்ல முயன்ற போது கத்தார் அரசு இவரை வெளியேற்றியது. சிரியாவிலிருந்து 2015-ஆம் ஆண்டு கோவைக்கு அவர் வந்துள்ளார். கோவையில் இருந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அவர் கத்தாரில் இருந்த போதே கோவையைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவாக உருவாக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழுவில் அவரை இணைத்துள்ளார்கள். இந்த பாலக்காட்டு இளைஞரை 2019-ல்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடிக்கிறது.


அவர் கொடுத்த வாக்குமூலத்தில்தான் கோவை தொடர்புகள் தெரிய வருகிறது. கத்தாரில் இயங்கிய இந்த ஐ.எஸ். ஆதரவு தீவிரவாத அமைப்பை ஹஷீர் என்கிற மலையாளி உருவாக்குகிறார். அவர் ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பை உருவாக்கிய அப்துல்லா யூசூப்புடன் தொடர்பு வைத்திருந்தார். அப்துல்லா யூசூப் ஆப்கானிஸ் தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பிறகு இந்த அமைப்பு பலவீனமடைகிறது.

கர்நாடகா மற்றும் கேரளா, கோவை ஆகிய இடங்களில் உள்ள பலரையும் இந்த அமைப்பு இணைத்திருக்கிறது என அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது பேஸ்புக் நண்பர்களை அலசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. ஆராயும்போதுதான், கலீஃபா என்கிற அமைப்பை கோவையில் நடத்தி வந்த முகம்மது அசாருதீன் சிக்குகிறார். அசாருதீனும் அவரது நண்பர்களும் தங்களது பேஸ்புக் பக்கங்களில் இசுலாமிய ஜிஹாத் பற்றி அதிகம் பதிவு செய்திருக்கிறார்கள். கோவையில் தங்கள் மத எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை லாரி ஏற்றிக் கொல்வது, வெடிகுண்டு வீசி தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொல்வது போல கொல்ல வேண்டும். அவர்கள் பொதுமக்கள் அல்ல. இசுலாமிய எதிரிகள் என குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப்பதிவுகளில் பதிவு செய்துள்ளதையும் அவர்கள் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களுக்கு வந்து சென்றதை வைத்து மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் முதல் தகவல் அறிக்கையிலும் அவர்களது சமூக வலைத்தள பதிவுகளை பதிவு செய்துள்ளது. இலங்கையில் தாக்குதல் நடப்பதற்கு முன்பே கோவை, சென்னை போன்ற இடங்களில் தாக்குதல் நடத்துவது பற்றி இவர்கள் திட்டமிட்டனர் என குறிப்பிடும் தேசிய புலனாய்வு ஏஜென்சி, இலங்கை குண்டுவெடிப்புக்கு பிறகு இவர்கள் தீவிரமாக தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் எனவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தான் இலங்கையில் குண்டுவைத்த சஹ்ரான் ஹாஸ்மியுடன் தொடர்பில் இருந்தார்கள். ஆனால் சென்னை பூந்தமல்லியில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கர் என்பவர் இலங்கையில் குண்டு வைத்தவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். அவரையும் கேரளாவில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சி கைது செய்தது. கேரளாவிலும் பலரை ஐ.எஸ். தொடர்புடையவர்கள் என என்.ஐ.ஏ. கைது செய்தது. அவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் போலவே ஜிஹாத் பற்றியும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைப்பது பற்றியும் சமூக வலைத்தளங்களில் பேசியதோடு ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர்களாக தான் இருந்தார்கள் என்கிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி.


கோவையில் பிடிபட்டவர்களிடம், துண்டுப் பிரசுரங்களை கைப்பற்றியதுடன், பதினான்கு மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், மூன்று லேப்டாப்புகளையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கைப்பற்றியதாக செய்திகள் வெளிவருகிறது. எனினும் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறிவைத்து என்.ஐ.ஏ. செயல்படுவதாகவும், ஜனநாயக ரீதியான அமைப்புகளை தடை செய்ய என்.ஐ.ஏ. பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகிறது. ""எங்களுக்கும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை'' என எஸ்.டி.பி.ஐ.யும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவும் அழுத்தமாக மறுத்து வருகிறது. ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும். தீவிரவாதம் எந்த மதச்சாயம் பூசி வந்தாலும் நசுக்கப்பட வேண்டும்.
 

 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.