ADVERTISEMENT

உடம்பைப் பெற்றது தவறா?

05:03 PM Oct 03, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எந்த மிருகம் எப்போது பாயும்
எதுவும் புரிய வில்லை -இங்கு
எவனுரு வத்தில் எங்கள் மரணம்
அதுவும் தெரிய வில்லை.


சொந்த ஊரெனும் சுதந்திரம் கூட
எமக்குக் கிடைக்க வில்லை;
சுடரும் விழியில் பெருகும் நீரை
வாழ்க்கைத் துடைக்க வில்லை.


உடம்பெனும் ஒன்றைப் பெற்றது தவிர
வேறென்ன தவறு செய்தோம்-அதில்
உயிரும் உணர்வும் தரித்தது தவிர
வேறென்ன தவறு செய்தோம்?


படிப்பதும் பணிக்குச் செல்வதும் தவிர
வேறென்ன தவறு செய்தோம்?-உமை
நம்பிப் பிறந்து வளர்ந்தது தவிர
வேறென்ன தவறு செய்தோம்!


உடல்வெறி கொண்டு உலவிடு வோரின்
இதயம் தசையா இரும்பா?-அவர்
உயிரைக் கிழித்துச் சாறு பிழிய
எம்முடல் உணர்வறு கரும்பா?


அடங்கா ஆசை என்னும் பெயரில்
ஆவி பறிப்பதும் தகுமா?-இந்த
அவலம் தொடரின் எம்முளத் தீயிடம்
உலகின் சாம்பலும் மிகுமா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT