Skip to main content

திமுக ஆட்சியைப் பிடிக்க மொழி மட்டும்தான் காரணமா? அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. #2

Published on 21/03/2021 | Edited on 30/03/2021

 

Tamil Nadu Election History Part 2

 

2021 பொங்கலுக்கு தமிழக அரசு ரூ.2,500 கொடுத்தது. இது தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்டது என எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்தனர். அது தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்டதா என்பது தனி விவாதம். ஆனால், தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் பணத்திற்காக தங்களது வாக்குகளை விற்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் வாக்குக்காக பணம் பரிசு பொருட்களை கொடுத்துகொண்டேதான் இருக்கின்றன.

 

1967 தேர்தலில் திமுக விரிவான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் அரிசி தட்டுபாடு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி; மூன்று படி முடியவில்லை என்றாலும் ஒரு படி; எனும் வாக்குறுதி திமுக வெற்றிக்கு வலுவானது. அண்ணா, “மூன்று படி இலட்சியம் ஒரு படி நிச்சயம்” என்று பிரச்சாரங்களில் முழங்கினார். நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் இருந்த அரிசி தட்டுபாடு பிரச்சனை, இந்தி திணிப்பு, திமுகவின் பிரச்சார விதம், பக்தவச்சலம் ஆட்சியில் இந்திக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடைபெற்ற பெரும் அடக்குமுறை, திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த எம்.ஜி.ஆரை தேர்தலுக்கு முன் எம்.ஆர்.ராதா சுட்ட நிகழ்வு, சிகிச்சை பெறும் அவரது படங்கள்.. என அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது.

 

Tamil Nadu Election History Part 2


இது ஒருபுறமிருக்க, உண்மையில் தமிழக மக்களுக்கு எதிரான சில காரியங்களையும் செய்தது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ். இதுவும் 1967 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில், தமிழகத்தின் அடிமட்ட விளிம்பு நிலை மக்களை நேரில் சந்திப்பது; பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரக்கூட்டங்கள் என தேர்தல் வெற்றியை வலுப்பெறச் செய்துகொண்டிருந்தது திமுக. இதன் நீட்சிவடிவம்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினின், ‘நமக்கு நாமே’ எனும் முன்னெடுப்பு. அதேதான், இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்,‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ ஆகிய பிரச்சார பயணமும். 1967 தேர்தலில் திமுக 137 இடங்களில் வென்றது. அண்ணா தலைமையில் திமுக அரசு அமைந்தது. இந்தத் தேர்தலில் காமராஜர் தோற்றார். தேர்தல் முடிவுகள் குறித்து காமராஜர், “மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தி.மு.க. மந்திரிசபை அமைத்து வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகள்" என்றார். தமிழக மக்கள் பணத்திற்காக தங்களது வாக்குகளை விற்பதில்லை, அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காகவே வாக்களிக்கின்றனர்.

 

Tamil Nadu Election History Part 2

 

எம்.ஜி.ஆர். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அடிமட்ட மக்களை எளிதில் சந்திப்பது அவர்களின் குறைகளை நேரடியாக கேட்பது, அதற்கு தீர்வு காண்பது உள்ளிட்ட நடைமுறை இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆரின் தலைமைக்கு பின்பு ஜெயலலிதாவின் அதிமுக கட்சியில் இது சற்றே தோய்ந்துதான் போனது. எம்.ஜி.ஆர். மக்களிடம் எவ்வளவு நெருங்கிவந்தாரோ அதே அளவு தனது கட்சியின் சின்னமான இரட்டை இலையை வெகுஜன மக்களிடம் பரிட்சியம் ஆக்கினார். கட்சியின் கொள்கையுடன் கலந்த வாக்காளர்கள், வேட்பாளரை அறிந்து வாக்களிப்பார்களோ இல்லையோ; கட்சியின் கொள்கையில் பிணைந்திருக்கும் சின்னத்திற்கே வாக்களிப்பர். அதனாலே பெரிதும் பிரச்சாரங்களில் வேட்பாளர் குறித்து பேசுவதை காட்டிலும் கட்சியின் சின்னம் குறித்தும் கட்சியின் தலைமை, கொள்கை குறித்தும் பெரும் அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இப்படியான நிலையில், அதிமுக கடந்த பத்துவருடங்களாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இது பெரிதே மாறுபட்ட தேர்தல் அரசியல். இது எப்படி சாத்தியமானது..?

 

காங்கிரஸ் ஆட்சியை அசைத்துப் பார்த்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்! அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்...! #1

 


கலைஞர் செய்து காட்டியதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா? | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #3
 

 

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.