ADVERTISEMENT

"தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம்' எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ்

12:59 PM Feb 28, 2019 | Anonymous (not verified)

"திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என்பதை வலியுறுத்தி வந்த பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த நிலையில், பிப்ரவரி 25 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி, "2011-ல் நாங்கள் அப்படிச் சொன்னபோது இருந்த அரசியல் சூழல் வேறு; இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாரும் வெல்லமுடியாது. கூட்டணி வைத்தாலும் தமிழகத்தின் நலன்களை முன்னிறுத்தி நடத்தும் போராட்டங்களிலிருந்து பின்வாங்கமாட்டோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருப்பவர்களோடு கூட்டணி சேர்ந் தால்தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதற்காகத்தான் கூட்டணியை தேர்ந்தெடுத்தோம்'’ என விளக்கமளித் திருக்கிறார்.

ADVERTISEMENT

அன்புமணியின் இந்த விளக்கம் பா.ம.க.வினரிடமும் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது பற்றி பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ‘""அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்தானதை அடுத்து ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்களிடம் ஆலோசித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது, "திராவிட கட்சிகளைப்பற்றி நாம் வைத்த விமர்சனங்கள் நமக்கு எதிராக பெரிதுபடுத்தப்படலாம். தேர்தல் களத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. தொண்டர் களிடையே இணக்கமில்லாச் சூழலை இது உருவாக்கும். அதனால் அ.தி.மு.க. தலைவர் களுக்கு விருந்து வைப்பதன் மூலம் இரு கட்சிகளின் தொண்டர்களிடையே நெருக்கம் உருவாகும்' என விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. தலைவர்களிடம் ராமதாஸும் அன்புமணியும் பேச, அவர்கள் சம்மதித்தனர். இதனையடுத்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அ.தி.மு.க. தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தடபுடல் விருந்து கொடுத்தார் ராமதாஸ். மதுரை வந்திருந்த அமித்ஷா, ஓ.பி.எஸ்.சையும் தங்கமணியையும் மதுரைக்கு அழைத்ததால் மதிய விருந்து இரவு நேர விருந்தாக மாற்றப்பட்டது..

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ம.க. மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பேச்சு எழுந்தபோது, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் "தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் கட்சி தலைவர்கள், கடந்த தேர்தலில் தி.மு.க.வை தாக்கிப் பேசிய பேச்சுக்களை நாம் தொகுத்து வைக்கலாம். அவர்களுக்கு பதிலடியாக தேர்தல் களத்தில் பயன்படுத்துவோம். கூட்டணி வேறு; கொள்கைகள் வேறு' என சொல்லியிருக்கிறார்கள்.

இருப்பினும், "பா.ம.க. ஏன் கூட்டணி வைத்தது என்பதை தெளிவுபடுத்திடலாம்' என அவர்களிடம் ராமதாஸ் சொன்னதுடன், மீடியாக்களிடமும் தெளிவுபடுத்துமாறு அன்புமணியிடமும் சொன்னார்'' என்று பின்னணிகளை விவரித்தனர் பா.ம.க.வினர்.

தங்கள் தொகுதி பா.ம.கவிடம் பறிபோகுமோ என்ற பதற்றம் வட தமிழகத்திலுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் உள்ளது. பா.ம.க.வினருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் எடப்பாடியிடம் கேட்டு வருகிறார்கள். அவரோ, "தே.மு.தி.க.வின் முடிவைப் பொறுத்து சில பல விசயங்கள் மாறக்கூடும்' என சொல்லியபடி இருக்கிறார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி கள் குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர் களிடம் நாம் பேசிய போது, ‘""மத்திய சென்னை, ஸ்ரீபெரும் புதூர், அரக்கோணம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. வராதபட்சத்தில், மத்திய சென்னைக்குப் பதிலாக மயிலாடுதுறையும், திண்டுக்கல்லுக்குப் பதிலாக கள்ளக்குறிச்சியும் மாற்றி தருவதாக எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் எடப்பாடி மற்றும் ராமதாஸுக்கிடையே போட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது''’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.

ADVERTISEMENT


மேலும், தே.மு.தி.க.வின் வருகை குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, ""மூன்று சீட்டுதான் அதிகபட்சமாக தரமுடியும்னு அ.தி.மு.க. சொல்லி விட்டது. பா.ஜ.க. கொடுத்த தொடர் வலியுறுத்தலில் தொடர்ந்த பேச்சு வார்த்தையால், மெடிக்கல் கல்லூரிக்கு ஒப்புதல், பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் , தேர்தல் செலவுத் தொகை என டிமாண்டுகள் தொடர்ந்தன. ராஜ்யசபா சீட்டுக்கு எடப்பாடி கடும் மறுப்பு தெரிவித்தார். அந்தக் கோபத்தில்தான் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வைபவத்தை துவக்கினார் பிரேமலதா. இந்த நிலையில், "யாரிடமும் கெஞ்ச வேண்டாம். நாம் தனித்துப் போட்டியிடுவோம். நாம் வாங்கும் ஓட்டு இரண்டு கட்சி களையும் காலி செய்துவிடும்' என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆவேசம் காட்டி வருகிறார். "தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம்' எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ். என்ன முடிவெடுப்பதென தெரியாமல் தடுமாறுகிறார் பிரேமலதா'' என்று விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதற்கிடையே, "கடந்த 2016 தேர்தலில் ம.ந.கூ. கட்சிகளுடன் இணைந்து நின்றே 2.4 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு பலனில்லை. அதனால் அவர்களை அழைக்க வேண்டாம்' என அ.தி.மு.க. தலைமைக்கு யோசனை தெரிவித்திருக்கிறதாம் பா.ம.க.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT