Skip to main content

அதிமுக கூட்டணி தலைவர்கள் ஷாக்... ஒரே கல்லில் பலமாங்காய் அடிக்கும் முதல்வர் எடப்பாடி

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போட்டு வந்த ஆளும் அதிமுக அரசு உச்சநீதிமன்ற உத்தரவால் விரைவில் உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல்களை நடத்தவேண்டிய இறுதி நெடுக்கடிக்குள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர்  அல்லது ஜனவரிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இரண்டு  தலைமைகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சியினரை விருப்ப மனு செய்ய அறிவித்ததோடு திமுகவில் சென்ற 14 ஆம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதேபோல் 15 மற்றும் 16 ஆகிய இருநாட்களில் அதிமுக விருப்ப மனு வாங்கியது.

 

tamilnadu local election... eps new plan

 

இந்த பின்னணியில் அதிமுக கூட்டணி காட்சிகளுக்குள் பதவியை பெறுவதில் போட்டி குழப்பம் சலசலப்பு என உருவானது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தங்களுக்கு 5 மேயர் பதவிகள் வேண்டும் எனவும், அடுத்துள்ள பாமக 4 மேயர் பதவி வேண்டும் என்றும் அடுத்து தேமுதிக 3 மேயர் பதவியை எங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இது போதாதற்கு புதிய நீதி கட்சியான ஏசிசண்முகம் 1 மேயர் பதவி வேண்டும் என்றும் இப்படி கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் 13 கணக்குப்போட  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த எடப்பாடி வேறு கணக்கை போட்டார். அதுதான் ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது என்ற திட்டம்.

 

tamilnadu local election... eps new plan


ஆம், அந்த திட்டம்தான் தேர்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது. ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மறைமுக ஓட்டுப்போட்டு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது. இந்த கணக்குப்படி முதலில் கவுன்சிலராக வெற்றிபெற்று வாருங்கள் அப்புறம் நீங்கள் கேட்கிறபடி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி  தலைவர் பதவி பற்றி கலந்துக்பேசிக்கொள்வோம், இதுதான் எடப்பாடி போட்ட மாங்காய் அடிக்கும் திட்டம்.

 

tamilnadu local election... eps new plan

 

மாநகராட்சிம் முதல் பேரூராட்சி வரை கவுன்சிலர் பதவிகளை அதிமுகவிற்கு நிகராக கூட்டணி கட்சியினர் பெறமுடியாது என்பதே உண்மை நிலை. உதாரணத்திற்கு ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இதில் பாஜக சார்பில் 1 அல்லது 2 வார்டுகளில் போட்டியிடும் அளவிற்கு அந்த கட்சியின் பலம் உள்ளது. அதேபோல் தேமுதிக 3, பாமக 1 இந்த வரிசைப்படிதான் கவுன்சிலர் சீட் பெறமுடியும். இதிலும் போட்டியிடும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவர்களா என்பது உறுதிப்படுத்த முடியாது. இப்படியிருக்க இவர்களைவிட அதே இடங்களில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பிருக்கும். ஆக தேமுதிக கேட்கிற 3 மாநகராட்சிகளில் ஈரோடும் ஒன்று ஒரேஒரு கவுன்சிலர் இடம்கிடைத்து தேமுதிக மாநகராட்சிக்குள் நுழைந்தால் அதிகமுள்ள அதிமுகவினர் எப்படி தேமுதிகவுக்கு மேயர் பதவியை ஏற்றுக்கொள்ளவார்கள். நடைபெறாத ஒன்றாக அதிமுக கூட்டணி கட்சியினர் ஒட்டுமொத்தமாக முதல்வர் எடப்பாடியிடம் ஏமாந்துள்ளதாக புலம்ப தொடங்கிவிட்டனர்.

முதல்வர் எடப்படியோ எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறிக்கொண்டாலும் ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிகளை அதிமுக வசமே வைத்துக்கொள்ளும் திட்டம்தான் இது.

 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.