Skip to main content

பாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும்!! - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

gjh

 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், கூட்டணி பஞ்சாயத்து நடைபெற்றுவருகிறது. ஒருபுறம் பாமக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், பாஜக அதிக சீட் கோரி அழுத்தம் கொடுத்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல், பாஜக கூட்டணி, அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் பதில்கள் வருமாறு, 


தமிழ்நாட்டில் அடுத்த பரபரப்பு என்றால் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்தான். அனைத்து கட்சியினரும் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

பாமக தனியாக நின்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நடைபெறும் அந்த 9 மாவட்டங்களில் தென்காசி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாமக சற்று வலுவாகவே இருக்கிறது. எனவே தங்களின் பலத்தை தனியாக காட்ட வேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி தர்மம் என்ற ஒன்று உள்ளது. அதனை அவர்கள் மதிக்க வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைப்பாடு என்ற நிலைப்பாட்டை மக்கள் ஏர்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிகப்படியான இடங்களைக் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், இது பாஜகவுக்கு அதிமுக பெருந்தன்மையாக வாரிக்கொடுத்ததால் நடந்தது. பாஜக தனியாக நின்றால் ஒரு இடம் கூட ஜெயிக்காது என்பது அவர்களுக்கும் தெரியும், ஊர் உலகத்துக்கும் தெரியும். இந்த நான்கு பேரும் எப்படி ஜெயித்தார்கள். இதில் இருவர் திமுக, அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அதிமுகவின் கடுமையான உழைப்பினால் இது சாத்தியப்பட்டுள்ளது. தற்போது பாமக கூட்டணியைவிட்டு போனதால் தங்களுக்கு அதிக சீட், 25 சதவீத இடம் என்பதெல்லாம் சாத்தியமா? பாஜக கேட்டால் அதிமுக கொடுக்க முடியுமா? அவர்களுக்குள்ளாகவே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. ரெய்டு, கட்சி பிரச்சனை என போய்க்கொண்டிருக்கிறது. எனவே இடியாப்ப சிக்கலில் இருக்கும் அதிமுக, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பார்ப்பார்கள். இந்த நேரத்தில் பாஜக அதிக சீட் கேட்பது அபத்தமாக இருக்கிறது. அவர்களும் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறியுள்ளாரே? 

 

அண்ணாமலை பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர் அரசியலுக்குப் புதியவர். கள நிலவரம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தடா புடா என்று பேசி கட்சியை வளர்க்க முடியாது. உண்மையின் தன்மை தெரிய வேண்டும். இதைவிட பெரிய கூத்து, அடுத்த தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கூறுகிறார். இது சாத்தியமா? கேவலமாக இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இப்படி ஏடாகூடமாக பேசினால் அவர் மீது பொதுமக்களிடம் நல்ல பெயர் எப்போதும் வராமல் போய்விடும்.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.