காரணம் அந்த பல்புகளின் உபயோகிக்கும் நேரத்தை விட அதை டிஸ்போஸ் செய்வதில்தான் ஒளிந்திருக்கிறது பாதரசம் எனும் உலோக விஷம். சி.எப்.எல் பல்புகளை சாதாரணமாக நினைத்து வாங்கி பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். யூசர் மேனுவலை படிக்காமல் இந்த பல்புகளை உபயோகிக்க கூடாது. உதாரணமாக குண்டு பல்புகள் உடைத்தால் துணியினால் துடைத்து சுத்தம் செய்துவிடலாம் ஆனால் உடைந்த சி.எப்.எல் பல்புகளை சாதாரணமாக கைகளால் தொடக்கூட கூடாது. வேட்கம் கிளீனர், துணி என எதைவைத்தும் சுத்தம் செய்யக்கூடாது ஏனெனில் உடைந்த பல்பில் இருந்து வெளியேறும் பாதரசம் அறைமுழுவதும் பரவி பல தொற்றுக்களை பரப்பும்.
உடைந்த சி.எப்.எல் பல்புகளை வேட்கம் க்ளீனரால், துடைப்பத்தா
இப்படி இருக்க நாம் இங்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சி.எப்.எல் பல்பிலுள்ள 68 மில்லிகிராம் பாதரசத்தையும் மண்ணுக்கு பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம் சரியான கையாளும் முறை இல்லாமல் இருக்கிறது என்பது நிதர்சனமே. ஆயிரம் மணிநேரம் ஒரு குண்டு பல்பு எரிய மின் உற்பத்திக்கு 71 கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது, ஆனால் சி.எப்.எல் பல்பிற்கு 14.2 கிலோ நிலக்கரியே போதுமானது என்றாலும் மின் உற்பத்தியின் போது வெளியேறும் பாதரச அளவை கட்டுப்படுத்துவதுகூட எளிதானது. ஆனால் ஆயிரம் கோடிக்கணக்கில் செயலிழந்து போகும் சி.எப்.எல். பல்புகளை சம சமதளங்களிலும், குப்பை மேடுகளிலும் நாம் சாதாரணமாக வீசும் போதும் வெளியாகும் பாதரசத்தின் அளவு கட்டுப்படுத்த முடியாத சீரழிவை தரும்.
நாம் யாரும் மறக்க முடியாத ஒன்று ''மினாமடா'' 1950களில் மினாமடா வளைகுடாவை சுற்றியுள்ள மக்களை நரம்பியல் நோயின் மூலமாக உயிரிழக்க செய்தது இந்த பாதரசம்தான். மினாமிடாவை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் பாதரசக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு அவை மீன்களின் மூலம் மனித உணவு சங்கிலியில் புகுந்து இறுதியில் மனித உயிரிழப்பை ஏற்படுத்திய அந்த தாக்கம் மினாமிடா என்ற பெயராலே குறிப்பிட்டபட்டுவருகிறது. இன்று சமதளத்திலும் குப்பை மேடுகளிலும் கொட்டப்படும் சி.எப்.எல் பல்புகளிலிருந்து வெளிப்படும் பாதரசம் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பது நாம் பெரிதாக கவனிக்காத ஆபத்தின் கேள்விக்குறிதான்.