Skip to main content

மன உளைச்சலுக்கு ஆளான ப.சிதம்பரம்! திகார் என்றதும் டென்ஷனான ப.சிதம்பரம்!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

அமலாக்கத்துறையும் தன்னை கைது செய்யக்கூடும் என நினைத்த சிதம்பரம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை நீதியரசர்கள் பானுமதி, போபண்ணா ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணையில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், "முன்ஜாமீன் கேட்பது அடிப்படை உரிமை. அந்த உரிமை சிதம்பரத்திற்கு மறுக்கப்படுகிறது. அவர் எங்கும் தப்பித்துச் செல்லமாட்டார்' என வாதிட்டார்.

 

p.chidambaram



அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘"சிதம்பரம் தப்பிச்செல்வாரா? மாட்டாரா என்பதை விசாரணை அமைப்புதான் முடிவு செய்யும். சிதம்பரம் செய்திருக்கும் குற்றம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றவர்களின் வழக்குகள் பாதிக்கும்' என்றார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதியரசர்கள், "செப்டம்பர் 5-ந்தேதி இம்மனு மீது முடிவெடுக்கப்படும்' என்றும் "அதுவரை சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது' எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

 

congress



இதனையடுத்து, செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பளித்த நீதியரசர்கள், "முன்ஜாமீன் என்பதை அடிப்படை உரிமையாக கருத முடியாது. சரியான பாதையில் இந்த வழக்கு பயணிப்பதாக நாங்கள் கருதுகிறோம். விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும்' என கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், "ஜாமீன் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு செய்யலாம்' எனவும் தெரிவித்தனர் நீதியரசர்கள்.


சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதால் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு எந்த தடையும் இல்லை. இதனால், உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட சி.பி.ஐ. காவல் முடிந்ததால் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., "சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பி நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்' என வாதிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபில், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஏற்கனவே ஜாமீன் தரப்பட்டிருக்கிறது. அதனால் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதுதான் இயற்கை நீதி' என்றார் அழுத்தமாக. இதனை கடுமையாக மறுத்த சி.பி.ஐ. வழக்கறிஞர்கள், "சிதம்பரம் வெளியே இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. சிறைக்கு அனுப்புங்கள்' என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபில், "அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கு செல்லவும் சிதம்பரம் தயாராக இருக்கிறார். அதனால் சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து ஜாமீன் வழங்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்தார். நீதிபதி அஜய்குமார், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்து அவரை 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சிதம்பரத்திற்கு எதிரான விவகாரங்கள் குறித்து டெல்லியில் விசாரித்த போது, ""ஐ.என். எக்ஸ். மீடியா வழக்கில் 15 நாட்கள் சி.பி.ஐ. கஸ்டடி யில் இருந்த சிதம்பரம், மன ரீதியாக மிகவும் பலகீன மடைந்திருக்கிறார். சி.பி.ஐ. கேட்ட பல கேள்விகள் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கஸ்டடி முடிந்ததும் திகார் சிறைக்கு அனுப்பி வைப்பதற்கு வசதியாக ஜாமீன் கிடைக்காமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. முன்கூட்டியே செய்து முடித்துவிட்டது. பொரு ளாதார குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கென்றே திகாரில் தனி ப்ளாக் உள்ளது. அங்கிருக்கும் 7 ஆம் எண் கொண்ட அறை சிதம்பரத்திற்காக தயார் செய்யப்பட்டிருக் கிறது. "சி.பி.ஐ. கஸ்டடி முடிந்ததும், அமலாக்கத் துறை உடனடியாக கைது செய்யவேண்டாம். அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறையிலேயே அமலாக்கத்துறை அவரை கைது செய்யட்டும். சிறையில் சில நாட்கள் இருக்கும்படி அவரை விட்டுப்பிடித்து அதன்பிறகு அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்தால் போதும்' என அட்வைஸ் செய்திருக்கிறது உள்துறை. இந்த அட்வைஸை அமித்ஷாவின் கட்டளையாகவே எடுத்துக்கொண் டனர் சி.பி.ஐ. அதிகாரிகள். கோர்ட் உத்தரவுப்படி இசட் பிரிவு பாதுகாப்புடன் கட்டில், மெத்தை, போர்வை என வசதிகள் செய்யப்பட்டாலும் திகார் என்றதும் திகிலாகிவிட்டார் ப.சி.

சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் மூன்று மாதம் சிறையில் இருந்து அமித்ஷா அனுபவித்த வேதனைகளை ஓரிரு நாட்களிலேயே சிதம்பரம் உணர வேண்டும் என்கிற மேலிடத்தின் விருப்பத்திற்கேற்பவே சிதம்பரம் விசயத்தில் நடந்து வருகின்றன'' என்கிறார்கள்.
 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.