Skip to main content

ஊரடங்கு காலத்தில் தேர்ச்சி! வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

Vijay Sethupathi

 

மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.

 

அதேபோல் 'மண்டி' என்கிற ஆன்லைன் விளம்பரத்தில் நடித்ததற்காக சிறு குறு வியாபாரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, தயங்காமல் மன்னிப்புக் கேட்டுவிட்டு, விளம்பரத்திற்கும் தடை போட்டவர் விஜய்சேதுபதி. அப்படிப்பட்ட விஜய்சேதுபதியின் கைகளில் இப்போது 'லாபம்', 'க/பெ.ரணசிங்கம்', 'துக்ளக் தர்பார்'’ உட்பட 5 படங்கள் உள்ளன.

 

'லாபம்'’ படத்தின் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், கம்யூனிச சித்தாந்தத்தின் மீது பற்றுள்ளவர் என்பதால், 'லாபம்- பகல் கொள்ளை' என சப்-டைட்டில் வைத்துள்ளார். முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல் பேசும் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிதான். எஸ்.பி. ஜனநாதனின் 'புறம்போக்கு' படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. அந்தப் புறம்போக்கிற்கு உண்மையான அர்த்தத்தைச் சொன்னவர் எஸ்.பி.ஜனநாதன்.

 

'க/பெ.ரணசிங்கம்' படம் மணல் மாஃபியாக்களையும் குடிநீர் கொள்ளையர்களையும் பற்றிய கதையுடன் வருகிறது.

 

'துக்ளக் தர்பார்'’ படத்தில்தான் செம அரசியல் தர்பார் நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் எஸ்.லலித் தயாரிக்க, டெல்லி பிரசாத், தீனதயாளன் என்ற புதியவர் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துள்ளது.

 

முடிந்துள்ள அந்தப் பாதியிலும் பண மதிப்பிழப்பால் மக்கள் அல்லாடியது, ஜி.எஸ்.டி. வரி, தினசரி ஏறும் பெட்ரோல் விலை என எல்லா பிரச்சினைகளையும் தங்களால் முடிந்த அளவுக்கு போட்டுத் தாக்கியுள்ளதாம் படக்குழு.

 

இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் திரைக்கதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார் விஜய்சேதுபதி. அந்த அனுபவத்தை வைத்து 'துக்ளர் தர்பார்' படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் குறித்து டைரக்டர் டெல்லி பிரசாத்திடம் ஆலோசித்தாராம் விஜய்சேதுபதி.

 

அதன்படி இந்த லாக்டவுன் காலத்தில் கைதட்டச் சொன்னது, மணி அடிக்கச் சொன்னது, இங்கே ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடையைத் திறந்தது, 28 நாளில் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் எனச் சொன்னது, 20 லட்சம் கோடி எங்கே போச்சு, என்ன ஆச்சு என சகலத்தையும் துக்ளக் தர்பாரின் மீதிப் பாதியில் பிரித்து மேயப் போகிறார்களாம்.

 

‘நையாண்டி கிங்’ ரா.பார்த்திபன் இருப்பது படத்திற்குக் கூடுதல் சிறப்பு.

 

 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.