Skip to main content

சந்திரயான் 3; சாதித்த தமிழர்!

Published on 14/07/2023 | Edited on 23/08/2023

 

Chandrayaan 3; Achieved Tamil!

 

ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவிய சந்திரயான் மூன்று என்ற விண்கலத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் (42). இவருடைய தந்தை பழனிவேல், தாயார் ரமணி. இவரது தந்தை தென்னக ரயில்வேயில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பம் விழுப்புரத்தில் வசித்து வருகிறது. வீரமுத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரத்தில் உள்ள ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை முடித்தார்.

 

அதன் பின்னர் திருச்சி ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். பிறகு சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து பயற்சி பெற்றார். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இவருக்கு பணி கிடைத்துள்ளது. தற்போது சந்திராயன் மூன்று திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்று சந்திரயான் மூன்று என்ற விண்கலத்தை செலுத்தும் அளவிற்கு இவரது ஆராய்ச்சி படிப்பு உதவியிருக்கிறது. ஏற்கனவே 2008ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் சந்திராயன் ஒன்று என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அந்த செயற்கைக்கோள் தோல்வியில் முடிந்தது.

 

நிலவு ஆராய்ச்சியில் தலைமை தாங்கப்போகும் இந்தியா

 

அதன் பிறகு 2019ஆம் ஆண்டில்  சில தொழில்நுட்பங்களைப் புதிதாகப் புகுத்தி சந்திரயான் இரண்டு என்ற விண்கலம் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு அதன் ரோவர் கருவி கீழே விழுந்ததால் வெடித்து சிதறியது. இதனால் இரண்டாவது விண்கலமும் தோல்வியில் முடிந்தது.

 

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் வீரமுத்துவேல் இஸ்ரோவில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை தயாரித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் சமர்ப்பித்தார். அதில், விண்கலத்தில் உள்ள ரோவர் எப்படி தரை இறங்க வைக்கும், அதை எப்படி இயக்குவது என்பது குறித்து தெளிவான தொழில்நுட்ப கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார். இந்த கட்டுரையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு, அவரது கட்டுரையை ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு திட்டக்குழு இயக்குநராக வீரமுத்துவேலை இஸ்ரோ நியமித்தது.

 

அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் சக விஞ்ஞானிகள் ஒத்துழைப்போடு சந்திரயான் மூன்று விண்கலம் தயாரிக்கப்பட்டு ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நான்காவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா சாதனையை படைத்துள்ளது.

 

ஒரு ரயில்வே ஊழியரின் மகன் படித்து இஸ்ரோ விஞ்ஞானியாகி அதன் திட்ட இயக்குநர் பதவி வரை உயர்ந்து சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக வீரமுத்துவேல் திகழ்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.