ADVERTISEMENT

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பு! 1045 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

01:56 PM Nov 09, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்தனர். 1045 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

ADVERTISEMENT

* இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல

* சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய ராம்லல்லா அமைப்பின் மனுவை ஏற்று தீர்ப்பு

* அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் கருதுகிறார்கள். அந்த இடத்தைத்தான் இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள்.

* சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.

* அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் ராமர், சீதை வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது

* தொல்லியல் துறையின் ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது

* காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. மசூதிக்கு கீழே இருந்த கட்டுமானம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல

* சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்

* ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது

* 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு

* பாபர் மசூதி இருந்த இடம் தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை

* ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோவில் கட்டலாம்

* அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்

*அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவு

*அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்

* பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு

* அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும். இதற்காக, 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் உறுதிசெய்ய வேண்டும்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT