Skip to main content

அ.தி.மு.க.-பா.ஜ.க. சீட்டு மல்லுக்கட்டு!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

திகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு... கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

எண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ல் 42 தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் வெற்றி பெறும். மாயாவதியும் அகிலேஷும் கைகோர்க் கும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு பழைய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்குள்ள 80 தொகுதிகளில் 35 இடங்களை ஜெயிக்கும். அதனால் அடுத்து அமையப் போவது பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணி அரசுதான். அதில் அ.தி.மு.க. மந்திரிசபையில் இடம்பெறும் என்கிற இந்த "கேரட்டை' காட்டிதான் தமிழகத் தில் உள்ள கட்சிக் குதிரைகளை பா.ஜ.க. வளைத்து வருகிறது.

eps



மத்திய அமைச்சர் ஆசையில்தான் அ.தி.மு.க. தலைவர்கள் தங்களது பிள்ளைகளை களமிறக்குகிறார்கள். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தில் தொடங்கி தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோரது வாரிசுகளோடு லேட்டஸ்டாக எம்.சி.சம்பத், வளர்மதி ஆகியோரின் மகன்களும் களம் காண தயாராகி வருகிறார்கள். ஜெயித்தால் மந்திரி... தோற்றால் ஒரு தேர்தல் அனுபவம் என ஜெ. இல்லாத அ.தி.மு.க.வை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சி நடக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

"இவ்வளவு இருந்தும் ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி என அ.தி.மு.க. அறிவிக்க தயங்குகிறது' என கேட்டால், ""வெயிட் பண்ணுங்க சார்'' என அ.தி.மு.க.வில் இருந்து பதில் வருகிறது. "திருப்பூரில் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு வருமா?' என பா.ஜ.க.வினரிடம் கேட்டால் "அந்த கூட்டத்தில் கூட்டணி பற்றிய ஒரு சில சிக்னல்கள்தான் வரும்' என்கிறார்கள். "பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.வின் பிறந்தநாள் வருகிறது. அன்று வேட்பாளர்கள் பெயர்களுடன் அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது' என மென்று முழுங்குகிறார்கள் அ.தி. மு.க.வினர்.

""பா.ஜ.க. சார்பில் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அ.தி.மு.க. சார்பில் நேரடியாக தங்கமணி, வேலுமணி... மறைமுகமாக ஜக்கி வாசுதேவ், கேரள கவர்னர் சதாசிவம் ஆகியோர் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இதில் ஆரம்பகட்ட பேச்சுகள் முடிவடைந்து விட்டன. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் அ.தி. மு.க.விற்கு 25 சீட் மற்ற கட்சிகளுக்கு 15 சீட் என முடிவானது. இதையே தம்பிதுரை எதிர்க்கிறார். "பா.ஜ.க.வின் கையில் 15 தொகுதிகள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். இது எம்.ஜி.ஆர்., ஜெ. உருவாக்கிய கட்சி. அதை பா.ஜ.க.விடம் அடகு வைப்பதை அ.தி.மு.க. தொண்டன் ஏற்க மாட்டான்' என ஓ.பி.எஸ்.சிடமும் இ.பி.எஸ்.சிடமும் நேருக்கு நேர் சண்டை போட்ட தம்பிதுரையிடம், "உங்களுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம்' என இருவரும் சமாதானம் பேசினார்கள்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

bjp


""நாம் பா.ஜ.க.வுடன் கூட்டணி போகா விட்டால் நாங்கள் குடும்பத்துடன் சிறைக்கு போவோம். அத்துடன் எங்களை சார்ந்து நிற்கும் கவுண்டர் இன பிரமுகர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வருமான வரித்துறையின் ரெய்டுகளில் சிக்குவோம்'' என்றும் ஜக்கி வாசுதேவும் கேரள கவர்னர் சதாசிவமும் எச்சரிக்கிறார்கள் என ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் சொன்னதை ராஜ்யசபா சீட் என்கிற "கேரட்'டோடு ஏற்றுக் கொண்டார் தம்பிதுரை என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

அ.தி.மு.க.வின் தொகுதிகள் போக மீதமுள்ள 15 தொகுதி களில் பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பெரும் மோதல் வெடித்துள்ளது. பா.ம.க.விடம் பேசி வரும் நிர்மலா சீதாராமனிடம் முதலில் புதுச்சேரியோடு சேர்த்து ஏழு தொகுதி என ஆரம்பித்த பா.ம.க., 6 அடுத்து 5 என ஒவ்வொரு படியாக இறங்கியது. ஒரு கட்டத்தில் நிர்மலா சீதாராமன் "அன்புமணி மீது மருத்துவ கல்லூரி அனுமதியில் நடைபெற்ற ஊழல் வழக்கு இருக்கிறது. உங்களுக்கு தி.மு.க. முகாமில் வரவேற்பில்லை' என வெடித்திருக்கிறார். அதற்கு பதிலளித்த பா.ம.க.வோ, ""பா.ஜ.க. 10 தொகுதிகளை கேட்கிறது. எங்கும் நீங்கள் நோட்டாவை தாண்டி வாக்குகள் பெறவில்லை. அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் வாக்குகளில் வெற்றி பெற நினைக்கிறீர்கள். அது நியாயமா?'' என கேட்டிருக்கிறார்கள்.

""கூட்டணி பேச்சுவார்த்தையில் ஜெ. பாணியை பின்பற்றி வந்தால் வரவேற்போம். போதாதென்றால் எங்களுக்கு பாதிப்பில்லை'' என சொல்லிவிட பா.ம.க. ரெடியாகிவிட்டது. அ.தி.மு.க.வும், ""25 தொகுதிகளுக்கு குறையாமல் இதுவரை நாங்கள் போட்டியிட்டதில்லை'' என உறுதியாக நிற்கிறது. கடைசியாக பா.ஜ.க. 10 தொகுதியில் இருந்து தனது தொகுதிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. தே.மு.தி.க., புதிய தமிழகம், ஜி.கே.வாசன், கொங்கு கட்சி போன்றவை "கொடுப்பதை வாங்கிக் கொள்கிறோம்' என்ற நிலையில் உள்ளன.

ஆனால் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா "நான் மதுரையில் நிற்பேன்' என்கிறார். அதேபோல் ஜி.கே.வாசன் தனது சொந்த ஊரான தஞ்சாவூரை கேட்கிறார். தமிழிசை தென்சென்னை, வானதி கோவை, திருப்பூர் சி.பி.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் பொன்னார், தஞ்சையில் கருப்பு முருகானந்தம் ஆகியோர் போட்டியிட நிர்மலாவை அணுகியுள்ளனர். தென்சென்னை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் வெற்றி பெற்ற தொகுதி. கோவை, திருப்பூர் ஆகியவை வேலுமணியின் வாரிசு குறி வைக்கும் தொகுதி. மதுரை அ.தி. மு.க.வின் தொகுதி. பா.ஜ.க.விற்கு வாக்கு உள்ள பகுதிகளில் பா.ஜ.க. நிற்ப தோடு அ.தி.மு.க. தொகுதிகளையும் குறிவைத்து தாமரையை மலரச் செய்வது சரியா? என்கிற போர்க்குரல்கள் அ.தி.மு.க.வில் கேட்கிறது.

இதற்கிடையே மதுரையில் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை களமிறக்குகிறார் டி.டி.வி.தினகரன். அதுபோல திருச்சிக்கு சாருபாலா தொண்டைமான் என தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிலி கொடுக்கும் வேட்பாளர்களை செலக்ட் செய்து வைத்துள்ளார் டி.டி.வி.தினகரன். இந்த இழுபறிக்கு நடுவில் குக்கர் சின்னம் டி.டி.வி.க்கு போய்விடக்கூடாது என்பதிலும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரக்கூடாது என்பதிலும் ஒரு புதிய கண்டிஷனையும் பா.ஜ.க.விடம் எடப்பாடி முன்வைத்துள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.