ADVERTISEMENT

ஹரி - அருண் விஜய் படத்தில் இணைந்த யோகிபாபு!

04:09 PM Aug 06, 2021 | santhosh

ADVERTISEMENT

இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சாமி 2'. அப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து 'அருவா' திரைப்படத்தை ஹரி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர், கதை தொடர்பான விவகாரத்தில் ஹரிக்கும், சூர்யாவிற்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படம் கைவிடப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இயக்குநர் ஹரி, தன்னுடைய உறவினரும் நடிகருமான அருண் விஜய்யை நாயகனாக வைத்து படம் இயக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'அருண்விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக இயக்குநர் ஹரி கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து சில நாட்கள் கழித்து பூரண குணமாகி வீடு திரும்பினார். இதற்கிடையே கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 'அருண்விஜய் 33' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். காமெடி நடிகர் யோகிபாபு இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT