பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை தென்னிந்திய படங்களான பாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் கே.ஜி.எஃ ப் 2 படம் இணைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் நாயகன் யஷ் தனது மனைவி ராதிகா பண்டிட்டுடன் இணைந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். யஷ் மனைவி ராதிகா பண்டிட் பிறந்த ஊரான கோவாவிற்கு திடீர் விசிட்டடித்த அவர்கள் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தை நேரில் சென்று சந்தித்து உரையாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், கே.ஜி.எஃப் சூப்பர் ஸ்டாரை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.