விழாவில் ஸ்ட்ரைக்கிற்கு ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் பேசுகையில்.... "மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது என்ன பிரச்சனை வந்தாலும் நீ தைரியமாக இரு யார் வந்தாலும் வெட்டலாம் என்று கார்த்திக் சார் கூறி எனக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் சினிமா வேலைநிறுத்தத்தின் போது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம். எனது நண்பர் திருவுக்காகவும், 'வரு'வுக்காகவும் தான் இங்கு வந்தேன். ஏற்கனவே திருவுடன் மூன்று படங்களில் இணைந்துவிட்டேன். மற்றொரு படத்திலும் விரைவில் இணைய இருக்கிறோம்.
ADVERTISEMENT
நானும், நடிகர் கார்த்திக் அவர்களும் 'அந்த நிகழ்ச்சியில் உண்மையில் பெண் பார்க்கிறீர்களா இல்லையா?' என்று பல முறை ஆர்யாவிடம் கேட்டிருக்கிறோம். அதற்கு இதுவரை எங்களுக்கு பதில் வரவில்லை. அந்த நிகழ்ச்சியில் உண்மையில் என்ன நடந்தது என்று ஆர்யா தான் கூற வேண்டும். அவர் எப்பொழுதும் சும்மா செய்யும் வேலையை அந்த நிகழ்ச்சியில் காசு கொடுத்து செய்ய வைத்திருக்கிறார்கள்" என்றார் கிண்டலாக.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments