ADVERTISEMENT
மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ADVERTISEMENT
இந்த நிலையில் விஜயகாந்த் ரசிகர் ஒருவர், அவரது சொந்த செலவில் 80 தொழிலாளர்களை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த மாயன் என்ற ரசிகர், தனக்கு கீழ் பணிபுரியும் 80 தொழிலாளர்களை 8 லட்சம் ரூபாய் செலவு செய்து, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரவழைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Show comments