ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடு பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “நான் வில்லன் கதாபாத்திரங்களை ரசிக்கிறேன்.
திரையில் நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் மற்றும் விளையாடலாம். வெளிப்படுத்துதல் என்பது உணவு மற்றும் சுவை போன்றது, நான் எல்லா சுவைகளையும் கொண்டிருக்க விரும்புகிறேன். கத்ரீனா கைஃப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. திரைத்துறையில் அவர் இன்றும் இருப்பது, அவர் அழகாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவருடைய புரிதல் தான். அவர் ஒரு சிந்தனையுள்ள நடிகை” என்றார்.