இதனால், படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் ஆண்டனியிடம், விஜய் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர முடிவெடுத்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “சினிமாவில் சின்ன வயதிலிருந்தே அவர் நடிக்கிறார். 17 வயதிலிருந்தே ஒரே வேலையை பார்க்கிறார். அதில் உச்சமும் தொட்டுவிட்டார். அதனால் அன்பு கொடுத்த மக்களுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க போகிறார். அது வரவேற்கத்தக்கது தான்” என பதிலளித்தார்.
ஓட்டுக்கு காசு வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ரொம்ப வறுமை, அடுத்த வேலைக்கு சாப்பாடு இல்லை, பசங்களுக்கு பள்ளிக்கட்டணம் கூட கட்ட பணமில்லை என்ற சூழலில், காசு வாங்கிக்கலாம். நம்ம பணத்தை திருப்பி தராங்க. ஆனால் ஓட்டு போடும் போது மட்டும் காசு கொடுத்தவங்களுக்கு போடனும் என்று நினைக்க கூடாது. வாங்குவதில் ஒன்னும் தப்பில்லை. வாங்கிவிட்டு சரியான மனிதர்களுக்கு ஓட்டு போடலாம்” என்றார்.