ADVERTISEMENT

வரலட்சுமி சரத்குமாரின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்!

06:52 PM Oct 21, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

'காட்டேரி', 'பாம்பன்', 'பிறந்தாள் பராசக்தி', 'கலர்ஸ்', தெலுங்கில் பாலகிருஷ்ணா படம், கன்னடத்தில் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்து பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். 'அரசி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூரியகிரண் இயக்குகிறார். இப்படத்தில் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

ராஜராஜா மற்றும் வரலட்சுமி இணைந்து தயாரிக்க, விபின் சித்தார்த் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, படம் குறித்த அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT