ADVERTISEMENT
இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் அருண் விஜய் சேரும் சகதியுமாக ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மறு கையில் பிள்ளையார் சிலையுடனும் இடம்பெற்றிருந்தார். அந்த போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ADVERTISEMENT
இந்த நிலையில், இப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பூஜையுடன் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பூஜை விழாவில் பாலா, சுரேஷ் காமாட்சி, மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
Show comments