ADVERTISEMENT

"உங்கள் மதிப்புமிக்க நேரத்தின் 5 நிமிடங்களை இன்று மாலை 6 மணிக்கு ஒதுக்குங்கள்" - தமன் வேண்டுகோள்!

10:02 AM Aug 27, 2020 | santhosh

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். மேலும் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி கடந்த வாரம் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

திரைபிரபலங்கள் பலரும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி மீண்டும் ஒரு கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் 6.05 மணிவரை நடைபெற உள்ள கூட்டு பிரார்த்தனைக்கு அனைவரையும் அழைத்துள்ளார். மேலும், "உங்கள் மதிப்புமிக்க நேரத்தின் 5 நிமிடங்களை இன்று மாலை 6 மணிக்கு ஒதுக்குங்கள். எஸ்.பி.பி சாருக்காக பிரார்த்திப்போம். விரைவில் நோயிலிருந்து மீண்டு வாருங்கள் எஸ்.பி.பி சார்" என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT