ADVERTISEMENT

"உங்கள் கண்களில் உள்ள மின்னலை நினைவில் கொள்வேன் சார்" - தனுஷ் பட நடிகை வேதனை!

01:07 PM Aug 19, 2020 | santhosh

ADVERTISEMENT

பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் தனுஷின் அம்பிகாபதி பட நடிகை சுவாரா பாஸ்கர் மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"உங்கள் புன்னகையின் அரவணைப்பையும், உங்கள் கண்களில் உள்ள மின்னலையும் நான் எப்போதும் நினைவில் கொள்வேன் நிஷி சார்! #DombiviliFast #MumbaiMeriJaan படங்களின்போது நடந்த உரையாடல்களுக்கு நன்றி. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் நிஷிகாந்த் காமத்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT