Skip to main content

ஆண்டி என அழைத்த 4 வயது சிறுமி... திட்டித் தீர்த்த தனுஷ் பட நடிகை... கொந்தளித்த இணையவாசிகள்...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

தனுஷ் பாலிவுட்டில் முதன் முதலில் நடித்த படம் ராஞ்சனா. இந்த படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் சோனம் கபூர், சுவாரா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்று வெளியானது.  
 

swara

 

 

சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் இடத்தை பிடிப்பவர் சுவரா பாஸ்கராக இருப்பார். அவர் எது பேசினாலும் சர்ச்சை, அறிவுரை கூறினாலும் சர்ச்சை என்று சுவாரா பாஸ்கரை சர்ச்சை துறத்திக்கொண்டே இருக்கும். அவரும் அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஒரு பிரபல நடிகை பொது மேடையில் அந்த கருத்தை தெரிவித்தால் சர்ச்சையாகும் என தெரிந்தும் அவர் யோசிக்காமல் கூறிவிடுவார். கேட்டால் நான் உண்மையாக இருக்கிறேன் என்பார். தற்போது தன்னை ஆண்டி என அழைத்த ஒரு நான்கு வயது குழந்தை நட்சத்திரத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக அவர் ஒரு விவாத மேடையில் கூறியது வைரலாகி வருகிறது.

ஹிந்தி மொழி சினிமா நிகழ்ச்சியான ‘சன் ஆஃப் அபிஸ்’நிகழ்ச்சியில் சுவரா பாஸ்கர் கலந்துகொண்டார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுவரா சோப்பு விளம்பரம் ஒன்றில் கலந்துகொண்டாராம். அப்போது அதில் தன்னுடன் நடித்த நான்கு வயது குழந்தை நட்சத்திரம் தன்னை ஆண்டி என அழைத்தது பிடிக்காமல், அந்த குழந்தையை வசைப்பாடினேன் என்று டிவி நிகழ்ச்சியில் தைரியமாக தெரிவித்துள்ளார்.
 

miga miga avasaram


இந்த விஷயம் அப்படியே சமூக வலைதளங்களில் சூடுபிடிக்க, அவர் பேசிய அந்த வீடியோ காட்சி மற்றும் வைரலாகி வந்தது. மேலும் சுவரா ஆண்டி என்று ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வந்தனர் இணையவாசிகள். இதுகுறித்து சுவரா பாஸ்கரிடம் கேட்டபோது, ‘நான் அந்த குழந்தையை நேரில் திட்டவில்லை, என் மனதில் அப்படி திட்டிக்கொண்டேன், அதைதான் அந்த நிகழ்ச்சியில் கூறினேன்’ என்று கூறினார். எப்படி ஒரு குழந்தையை இப்படி திட்ட இவருக்கு மனசு வந்தது இவர் ஒரு மனிதரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.