ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இருந்தும் இவர் இன்னமும் ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இதற்கிடையே சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்படுவது ட்ரெண்டாகிவருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைதளத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன் பயோபிக் படம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார். அதில்... "தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் படம் எடுக்கப்பட்டால் என்னுடைய ஃபேவரிட் ஹீரோ சூர்யாதான் நடிக்க வேண்டும். அவரால்தான் என்னுடைய கதாபாத்திரத்தை செய்ய முடியும்" என கூறியுள்ளார்.
Show comments