நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கூட்டனி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல் தனித்துப் போடியிடும் சூழலே உருவாகியுள்ளது.
ADVERTISEMENT
இதனையடுத்து கமல்-ரஜினி இருவரும் இணைந்து இந்த தேர்தலில் பணிபுரிய வேண்டும் என்று விஷால் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ADVERTISEMENT
இந்நிலையில், விஷாலின் ட்வீட்டை குறிப்பிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “புரட்சிப் புலியாரே! நீங்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமே? அதான் சங்கப் பணத்தைக் காலி பண்ணியாச்சே. இங்கே உங்க வேலை முடிஞ்சது.. அடுத்து மக்களுக்குத்தான் உங்க சேவை தேவையாம்."நீங்கதான் மிகத் தேர்ந்த பழி வாங்கும் ஆட்டையபோடும் அரசியல்வாதியாச்சே!" சீக்கிரமா யோசிச்சு முடிவு எடுங்க” என்று பதிவிட்டுள்ளார்.
Show comments