இதனை தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘விஸ்வாசத்துல மனுசனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா, எப்பவுமே நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, ஜெயிக்கிறது என்னைக்குமே என் சொக்கன் தான்’ என்ற வசனத்தோடு வரும் நிலையில் சசிக்குமாருக்கும், உன்னி முகுந்தனுக்கும் விஸ்வாசமாக சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளது போல் அமைந்துள்ளது.