ADVERTISEMENT

‘மீண்டும் கதை நாயகன்’ - சூரி நெகிழ்ச்சி

06:23 PM Sep 11, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாவதாகவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் வெற்றிமாறன் பேசினார்.

இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்க, இதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது.

இந்நிலையில் சூரி ஹீரோவாக அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்க சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெற்றிமாறன் கதையில் இப்படம் உருவாகும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் படம் குறித்து சூரி, "கதை நாயகனாக நான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன், கும்பகோணத்தில் இனிதே தொடக்கம். இறைவனுக்கு நன்றி" என எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT