ADVERTISEMENT

மாநாடு ஷூட்டிங் அப்டேட்... சிம்புவுடன் நடிக்கும் பிரபல மூத்த இயக்குனர்...

12:01 PM Dec 04, 2019 | santhoshkumar

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு படம் இப்போது ஆரம்பிக்கும், அப்போது ஆரம்பிக்கும் என அவ்வப்போது தகவல்கள் வெளியான நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாநாடு படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ADVERTISEMENT


அந்த அறிக்கையில், ''வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

ADVERTISEMENT


அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளியான பிறகு சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிம்புவே நடித்து மகா மாநாடு என்றொரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 125 கோடி என்றும் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள படம் என்றும் அறிவிப்பு வெளியானது.

இதன்பின் காலங்கள் ஓட சுரேஷ் காமாட்சி மற்றும் சிம்பு இடையே பிரச்சனைகளை சினிமாத்துறையிலுள்ள சிலரை வைத்து பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த பஞ்சாயத்தில் சிம்பு காலை இத்தனை மணியில் இருந்து மாலை இத்தனை மணிவரைதான் ஷூட்டிங்கில் இருப்பார் என்பதுக்கூட எழுதி, அதை கையெழுத்திட்டு இருதரப்பினரும் சுமூகமாக பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து சிம்பு சபரிமலைக்கு மாலைபோடும்போது அவரை நேரில் சந்தித்து சுரேஷ் காமாட்சி புகைப்படம் வெளியிட்டார்.

இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்தாச்சு, ஆனால் இன்னும் ஷூட்டிங் செல்லவில்லையே என்று சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பிக்கொண்டிருக்க, மாநாடு படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்றால், மாநாடு படத்தின் ஷூட்டிங் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT