பல சிக்கல்களுக்கு பின் மீண்டும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தொடங்கியுள்ளது. வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வருடமாக நடைபெறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அதன்பின் படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியானது. இறுதியாக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநாடு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

sj suryah

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நேற்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படக்குழுவில் நடிக்கின்ற மற்ற நடிகர்களை அழைத்து விழா நடத்தினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதர நடிகர்கள் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.