ADVERTISEMENT

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகர் கைது; அதிர்ச்சியில் திரையுலகம்! 

01:01 PM Jun 13, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவரின் சகோதரரும், நடிகருமான சித்தாந்த் கபூர் நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நடைபெற்ற இரவுப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி நடிகர் சித்தாந்த் கபூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பாலிவுட்டை கடந்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் பிரபலம் சிக்கியுள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT