boyfriend who incident his girlfriend by slitting her throat

பெங்களூருவில் பணியாற்றி வரும் பிரசாந்தும்நவ்யாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் பிரசாந்த்தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் நிலையில், நவ்யா காவல்துறையில் உதவியாளராக இருந்து வந்துள்ளார். இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நவ்யா பிரசாந்திற்கு தெரியாமல் வேறு ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தெரிந்து கொண்ட பிரசாந்த் காதலி நவ்யாவை அழைத்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தொடர்ந்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் நவ்யாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. ஆனால், நவ்யா வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டதால் நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் நவ்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். பின்னர் பிரசாந்த் காதலி நவ்யாவை கேக் வெட்டியகத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

Advertisment

இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நவ்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவ்யாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டுக் கேட்டதாகவும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசாந்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.