ADVERTISEMENT

''நான் இதை எழுதுகிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை'' - ஷ்ரேயா கோஷல் உருக்கம்!

09:12 AM Jun 02, 2020 | santhosh

ADVERTISEMENT


பாலிவுட்டில் பிரபலமானவரும், சல்மான் கானின் ஆஸ்தான இசையமைப்பாளருமான வாஜித் கான் காலமானார். 42 வயதான அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று காலமானார். வாஜித் கான் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாடகி ஷ்ரேயா கோஷல் மறைந்த வாஜித் கானுக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

ADVERTISEMENT


''இதை நான் எழுதுகிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இது உண்மையற்றதாக உணர்கிறேன்... வாஜித் பாய், நான் கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய புன்னகை முகத்தை மட்டுமே பார்க்கிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் எப்போதும் நேர்மறைத்தன்மையை என்னிடம் கண்டீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எவ்வளவு அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் பலத்தையும் கொடுத்தீர்கள்.

நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது நான் தொழில்துறையில் ஒரு புதியவளாக இருந்தேன். ஆனால் நீங்கள் இதைக் குடும்பம் போல் என்னை உணரவைத்தீர்கள். எனவே உங்கள் மனத்தாழ்மை, உணர்திறன், அர்ப்பணிப்பு, மக்களுக்கு நல்லது செய்வதில் அயராத அன்பு, ஒரு சிறந்த திறமையான இசையமைப்பாளர்-பாடகர் என்பதற்கு மேலாகவும் அப்பால் என்னை நீங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்.


நாம் பேசும் ஒவ்வொரு முறையும், நீங்கள் எனக்குப் பதிவு செய்ய விரும்பும் பல அழகான மெல்லிசைகளை உருவாக்கியுள்ளீர்கள் என்று சொன்னீர்கள். நீங்கள் இசையின் தடுத்து நிறுத்த முடியாத சக்தியாக இருந்தீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். கடவுள் குடும்பத்திற்குப் பலம் அளிக்கட்டும். விடைபெறுவது மிகவும் கடினம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் வாஜித் கான்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT