ADVERTISEMENT

'செங்காந்தளே...' தாய்மையைக் கொண்டாடும் பாடலை வெளியிட்ட 'அரண்மனை 3' படக்குழு! 

06:39 PM Oct 06, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'செங்காந்தளே...' என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது, அரண்மனை 3 படத்திலிருந்து வெளியாகும் நான்காவது பாடலாகும். தாய்மையைக் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்பாடல் நடிகை ஆண்ட்ரியா கதாபாத்திரத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. இப்பாடலுக்கான வரிகளை பா.விஜய் எழுத, ரீமா பாடியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT