ADVERTISEMENT

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நடிகை

02:24 PM Jan 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் "வாத்தி படத்தில் முதல் நாள் எனக்கு" என தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT