இயக்குநர் ராஜமௌலி ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து இயக்கியிருந்த படம் ஆர்.ஆர்.ஆர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இந்நிலையில் சிறந்த சவுண்ட் மிக்சிங் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஆர்.ஆர்.ஆர் படத்தை கே படம் என்று விமர்சித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் ஆலியா பட் ஒரு காட்சிப்பொருள் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரசூல் பூக்குட்டியின் கருத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ஆஸ்கர் விருது பெற்ற ஒருவர் இப்படி பேசலாமா என்றும், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
கடந்த மே மாதம் ஓடிடியில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த வெளிநாட்டினர் ஆர்.ஆர்.ஆர் படத்தை 'கே படம்' என்று விமர்சனம் செய்தனர். அத்தோடு படத்தில் இடம்பெற்ற ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு இடையிலான பாசத்தை ஓரின சேர்க்கையோடு ஒப்பிட்டு பேசியிருந்த நிலையில் தற்போது ரசூல் பூக்குட்டியும் அதே வார்த்தை பயன்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.