இமைக்கா நொடிகள், அடங்கமறு படங்களுக்கு பிறகு விஷாலின் 'அயோக்யா' படத்தில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணா பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியபோது....
ADVERTISEMENT
ADVERTISEMENT
"பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
Show comments